பாகிஸ்தான்: செய்தி
பயங்கரவாதம் தொடர்ந்தால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நிச்சயம்: பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை
பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' என்ற பெயரில் நிச்சயம் தொடரப்படும் என்றும், அப்போது இந்திய ராணுவம் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்காது என்றும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: இந்தியா மீது ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டு; 'போர் நிலை' என பாதுகாப்பு அமைச்சர் கருத்து
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே கார் வெடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்தியா மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் கார் வெடிப்பு: நீதிமன்றத்திற்கு வெளியே கார் வெடித்து பலர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு வெடிப்பு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தாலிபான்கள் மறுப்பு
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு
பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்வினையாற்றியுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்கள் இந்திய அரசாங்க அமைப்புகள் மீது ஸ்பைவேர் தாக்குதலை தொடங்கியதாக தகவல்
பாகிஸ்தானுடன் தொடர்புடைய Transparent Tribe என்ற ஹேக்கர் குழுவின் ஒரு பெரிய சைபர்-உளவு பிரச்சாரம் குறித்து இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் Gen Z மாணவர்கள் போராட்டம் வெடிப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறைப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது கல்வித்துறை மாற்றங்களை எதிர்த்து Gen Z மாணவர்கள் தலைமையில் மற்றொரு பெரிய போராட்டத்தைச் சந்தித்துள்ளது.
'8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன': இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் புது தகவல்
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
"சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்!": தாலிபானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லை பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துருக்கியில் இன்று மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
சீனா, பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்வதாக டிரம்ப் கூறியதால் இந்தியாவுக்கு சிக்கலா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
'பாகிஸ்தான், சீனா அணு ஆயுத சோதனை செய்கின்றன; அமெரிக்காவும் அதைச் செய்ய வேண்டும்': டிரம்ப்
பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்; பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நவம்பர் 6 அன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக துருக்கி வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்தது.
பாகிஸ்தான் விண்வெளி வீரருக்குப் பயிற்சி அளித்து 'தியாங்கோங்' மையத்திற்கு அனுப்ப சீனா திட்டம்
சீனா தனது 'தியாங்கோங்' (Tiangong) விண்வெளி நிலையத்திற்கு ஒரு பாகிஸ்தான் விண்வெளி வீரரை குறுகிய கால பயணத்திற்காக அனுப்பி வைக்கும் என்று அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு ₹4,000 கோடி இழப்பு: CEO தகவல்
பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.
ஆழமடையும் பாகிஸ்தான்- பங்களாதேஷ் நட்பு: இந்தியா கவலைப்பட வேண்டுமா?
பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் டாக்காவில் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தார்.
ஆப்கானிஸ்தான் நிலைப்பாட்டால் பாகிஸ்தான்- தாலிபான் அமைதி பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் உறவுகளைப் பாதிக்காமல் பாகிஸ்தானுடன் பிணைப்பை வலுப்படுத்த முயல்கிறதாம் அமெரிக்கா
ஐக்கிய நாடுகளின் அமெரிக்க வெளியுறவு செயலாளரான மார்கோ ரூபியோ, பாகிஸ்தானுடன் அதன் மூலோபாய உறவை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா பார்க்கிறது.
பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான் கான் சேர்ப்பா? பின்னணி இதுதான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான், சவுதி அரேபியாவின் ரியாத் மன்றத்தில் பேசும்போது பலுசிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அவரைத் தனது அதிகாரப்பூர்வ பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தானாம்; ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் மிரட்டல்
அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) இஸ்தான்புல்லில் தொடங்கின.
இந்தியாவின் திரிஷூல் முப்படைப் பயிற்சியால் பீதி; NOTAM வெளியிட்டு வான்வெளியை கட்டுப்படுத்தும் பாகிஸ்தான்
இந்தியா தனது வரவிருக்கும் பெரிய அளவிலான முப்படை கூட்டு ராணுவப் பயிற்சியான திரிஷூலைத் தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தான் தனது மத்திய மற்றும் தெற்கு வான்வெளியின் பல விமானப் போக்குவரத்து வழித்தடங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான NOTAM (Notice to Airmen) அறிவிப்பை அக்டோபர் 28-29 ஆகிய தேதிகளுக்காக வெளியிட்டுள்ளது.
முஷாரஃபை விலைக்கு வாங்கி பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அமெரிக்கா கட்டுப்படுத்தியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்
அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்கும் அணைகள் கட்டும் ஆப்கானிஸ்தான்
தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான், குனார் ஆற்றில் அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு நீர் வருவதை தடுக்க திட்டமிட்டுள்ளது.
தீவிரவாதம் பயில பெண்களுக்கான ஆன்லைன் கோர்ஸ்: ₹500 கட்டணத்தில் தொடங்கியது JeM
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் புதிய பெண்கள் பிரிவான ஜமாத் உல்-முகமதுவுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக "துஃபத் அல்-முகமது" என்ற ஆன்லைன் பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆசிய கோப்பை: கோப்பையை பெற்றுக்கொள்ள பிசிசிஐயை மொஹ்சின் நக்வி வலியுறுத்தினார்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(BCCI) சமீபத்திய கோரிக்கையை நிராகரித்துள்ளதால், ஆசிய கோப்பை பஞ்சாயத்து தொடர்கிறது.
இந்தியத் தலையீடு குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களுக்கு இந்தியாவைக் காரணமாக்கி பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மௌலவி முகமது யாக்கூப் முஜாஹித் கடுமையாக நிராகரித்துள்ளார்.
தனி நாடாக குறிப்பிட்டாரா? சல்மான் கான் பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து வேறுபடுத்திப் பேசியதால் பரபரப்பு
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஜாய் ஃபோரம் 2025 நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் பேசியபோது, மத்திய கிழக்கில் பணிபுரியும் பல்வேறு தெற்காசிய சமூகங்களைப் பற்றிக் குறிப்பிட்டதில், பலுசிஸ்தான் மக்கள் என்பதை பாகிஸ்தான் மக்கள் என்பதில் இருந்து தனித்தனியாகப் பட்டியலிட்டது சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம்; தோஹா அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு
எல்லை தாண்டிய கடும் மோதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனடிப் போர் நிறுத்தம் செய்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மண்ணில் இரண்டாவது நாளாகத் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது.
அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானுடனான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ராணுவ தாக்குதலில் 3 கிரிக்கெட்டர்கள் உயிரிழப்பு; பாகிஸ்தானில் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் விலகல்
ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் நடந்த அண்மைய எல்லைத் தாக்குதல்களில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் முத்தரப்புத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடக்காது என தகவல்
48 மணி நேரத் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பல மாவட்டங்களைத் தாக்கி புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியில் சேர சீனாவிடம் பாகிஸ்தான் ஆதரவு கோரிக்கை
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், மேற்கத்திய நிதி நிறுவனங்களான ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் கடுமையான நிபந்தனைகளிலிருந்து விலகி, நிதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த உதவும் நோக்குடன், பிரிக்ஸ் அமைப்பின் நிதிக் கிளையான புதிய வளர்ச்சி வங்கியில் (NDB) உறுப்பினராகச் சேர சீனாவின் ஆதரவை முறைப்படி நாடியுள்ளது.
ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் நிபந்தனைகள் உண்டு; பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பேச்சு
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலில் வைரலாகும் 93,000 பேண்ட்கள் 2.0; பின்னணி என்ன?
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கடுமையான எல்லை மோதல்களுக்குப் பிறகு, ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆப்கானிஸ்தானின் கருத்துருவாக்கம் வலுப்பெற்றுள்ளது.
எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்: அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது.
ஆப்கான் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பேண்ட்டை விட்டுவிட்டு ஓடிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்? வைரலாகும் காணொளி
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இலக்கு வைப்பதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
முற்றிய பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதல்; உதவிக்கு கத்தார், சவுதி அரேபியாவை தொடர்பு கொள்ளும் பாக்.,
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட புதிய மோதல்கள் டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கைபர் பக்துன்க்வா எல்லையில் பாகிஸ்தான் - தாலிபான் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை
பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, செவ்வாய்க்கிழமை இரவு கைபர் பக்துன்க்வாவில் உள்ள குர்ரம் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்தன.
காசா அமைதி உச்சி மாநாட்டில் "நல்ல நண்பர்" மோடிக்கு புகழாரம் தந்த டிரம்ப்
எகிப்தில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரை பாராட்டியதுடன், மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வந்ததற்காக 'பெருமை' தெரிவித்தார்.
அதிகரிக்கும் மோதல்; ஆப்கானிஸ்தான் பதிலடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் காபூலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியது.
தாலிபான் பதிலடியை 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வலியுறுத்தல்
பாகிஸ்தானுடனான பதட்டத்தை அதிகரித்து, தாலிபான் படைகள் டூரண்ட் கோடு எல்லையில் நடத்திய பதில் தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) உரிமை கோரியது.